follow the truth

follow the truth

May, 15, 2025
Homeவிளையாட்டுT20 அரை இறுதிக்கான 4 அணிகளும் உறுதியாகின!

T20 அரை இறுதிக்கான 4 அணிகளும் உறுதியாகின!

Published on

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு4வது அணியாக பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. அதற்கமைய, அரையிறுதி மோதவுள்ள நான்கு அணிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

தென் ஆபிரிக்க அணி நெதர்லாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்ததையடுத்து, அரையிறுதிக்கான வாய்ப்பை தவறவிட்டது. அந்த அணியின் வெளியேற்றம் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிக்கு அரையிறுதிக்கான வாய்ப்பை வழங்கியது.

இந்த நிலையில், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், 5 விக்கெட்டுக்களால் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அதற்கமைய, குழு1ல் இருந்து நியூசிலாந்தும் இங்கிலாந்தும், குழு 2இல் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

எவ்வாறாயினும், இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதிப் போட்டியின் இறுதி அட்டவணையை இந்தியா – ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவு தீர்மானிக்கும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IPL போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்

பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்ததன் காரணமாக 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்...

இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் சனியன்று மீண்டும் ஆரம்பம்

இந்திய பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரை மீண்டும் மே 17 ஆம் திகதி தொடங்க இந்திய கிரிக்கெட்...

வீரர்களை நாடு திரும்புமாறு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவிப்பு

தமது அணி வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை...