எரிவாயு விநியோகம் குறித்து லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

524

எரிவாயு விநியோகம் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது.

எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாசாங்கு செய்யும் நோக்கில் சிலர் எரிவாயு இருப்புக்களை மறைத்து செயற்படுவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

மூன்று எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் எனவே, நாளை முதல் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, நாளை காலைக்குள் 120,000 சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here