follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுஎரிபொருள் நட்டத்திற்கே விநியோகிக்கப்படுகின்றது

எரிபொருள் நட்டத்திற்கே விநியோகிக்கப்படுகின்றது

Published on

ஒரு லீற்றர் டீசல் 12 ரூபாய் நட்டத்திற்கே தற்போது விநியோகிக்கப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் D.V. சானக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வினவியமைக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்றில் இதனை தெரிவித்தார்.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் மாற்றங்களை கொண்டுவருவதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர முன்னதாக அறிவித்திருந்தார்.

எனினும் விலைசூத்தரத்திற்கு அமைய எரிபொருள் விலையில் மாற்றங்களை கொண்டுவரப்படாமை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவிக்கின்றார்.

உலக சந்தையில் எரிபொருள் விலையானது அதிகரிக்கின்ற சந்தர்ப்பத்தில் விலைசூத்திரத்திரத்தை பயன்படுத்தி விலை அதிகரிக்கப்படுகின்றது.

குறைவடைகின்ற சந்தர்ப்பத்தில் ஏன் மக்களுக்கு எரிபொருளை குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்க முடியாது எனவும் ஹேஷா விதானகே வினவினார்.

இதற்கு பதிலளித்த D.V. சானக்க, டீசல் ஒரு லீற்றர் 12 ரூபாய் நட்டத்திலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 22 ரூபாய் நட்டத்திலும் விநியோகிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் கடந்த வாரம் எரிபொருளுக்கான விலை குறையவில்லை, மாறாக அதிகரித்துள்ளது என்பதனை ஹேஷா வித்தானகே புரிந்துக்கொள்ள வேண்டும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...