follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுஎரிபொருள் நட்டத்திற்கே விநியோகிக்கப்படுகின்றது

எரிபொருள் நட்டத்திற்கே விநியோகிக்கப்படுகின்றது

Published on

ஒரு லீற்றர் டீசல் 12 ரூபாய் நட்டத்திற்கே தற்போது விநியோகிக்கப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் D.V. சானக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வினவியமைக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்றில் இதனை தெரிவித்தார்.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் மாற்றங்களை கொண்டுவருவதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர முன்னதாக அறிவித்திருந்தார்.

எனினும் விலைசூத்தரத்திற்கு அமைய எரிபொருள் விலையில் மாற்றங்களை கொண்டுவரப்படாமை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவிக்கின்றார்.

உலக சந்தையில் எரிபொருள் விலையானது அதிகரிக்கின்ற சந்தர்ப்பத்தில் விலைசூத்திரத்திரத்தை பயன்படுத்தி விலை அதிகரிக்கப்படுகின்றது.

குறைவடைகின்ற சந்தர்ப்பத்தில் ஏன் மக்களுக்கு எரிபொருளை குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்க முடியாது எனவும் ஹேஷா விதானகே வினவினார்.

இதற்கு பதிலளித்த D.V. சானக்க, டீசல் ஒரு லீற்றர் 12 ரூபாய் நட்டத்திலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 22 ரூபாய் நட்டத்திலும் விநியோகிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் கடந்த வாரம் எரிபொருளுக்கான விலை குறையவில்லை, மாறாக அதிகரித்துள்ளது என்பதனை ஹேஷா வித்தானகே புரிந்துக்கொள்ள வேண்டும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...