follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்

Published on

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் நசர் அல்-அமீரி நேற்று (08) பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தார்.

பல்வேறு அம்சங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

அந்நாட்டின் தேசிய பேரவைக்கு (National Council) பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும்முறை தொடர்பில் விளக்கமளித்த தூதுவர், இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடினார். அத்துடன் சிறுவர்கள் மற்றும் பெண்களைப் வலுப்படுத்துவது தொடர்பிலும், குறிப்பாக வர்த்தகத்துறையில் பெண்களை வலுப்படுத்துவது குறித்தும் இங்கு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

நாட்டின் எரிசக்தித் தேவையைப் பூர்த்திசெய்யப் புதுப்பிக்கத்தக்க சக்தியை எவ்வாறு
பயன்படுத்தலாம் என்பதும் குறித்தும் இங்கு மேலும் கவனம் செலுத்தப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...

மஸ்கெலியா கங்கேவத்த த.வி பாடசாலையின் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட வகுப்பறை திறந்து வைப்பு

ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின் தரம் 6ற்கான மீள் புனரமைப்பு செய்யப்பட்டு...