மாணவர்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மில்லனிய குங்கமுவ கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படும் என மேல் மாகாண கல்வி திணைக்கள பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் கூறியுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் குறித்த அதிபர் மற்றும் மில்லனிய பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் இருவர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.