follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுஅலி சப்ரி கலந்துகொள்ளும் நேரடி ட்விட்டர் கலந்துரையாடல்

அலி சப்ரி கலந்துகொள்ளும் நேரடி ட்விட்டர் கலந்துரையாடல்

Published on

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் முன்னோக்கிய வழி தொடர்பில் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கலந்துகொள்ளும் நேரடி ட்விட்டர் கலந்துரையாடல் நாளை (10) இடம்பெறவுள்ளது.

நாளை (10) பிற்பகல் 12.30 முதல் பிற்பகல் 01.30 வரை பாராளுமன்றத்தின் @ParliamentLK எனும் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கினூடாக இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான பொதுமக்களின் கேள்விகளை #LKaskMP ஊடாக முன்வைக்க முடியும் என்பதுடன், நாளை நேரடியாக இணைந்து கொண்டும் கேள்விகளைக் கேட்க முடியுமென பாராளுமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை மையப்படுத்திய பாராளுமன்றத்திற்காக மக்கள் பிரதிநிதிகளையும் பொதுமக்களையும் நேரடியாக தொடர்புபடுத்தும் வகையில், பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இந்த நேரடி ட்விட்டர் கலந்துரையாடல் தொடரை ஏற்பாடு செய்துள்ளது.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...