follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP1இலங்கையில் உணவிற்கான நெருக்கடி மேலும் தீவிரமடையலாம்!

இலங்கையில் உணவிற்கான நெருக்கடி மேலும் தீவிரமடையலாம்!

Published on

நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் உணவிற்கான நெருக்கடி மேலும் தீவிரமடையலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை, குறுகிய காலப்பகுதிக்குள் இரு மடங்காகியுள்ளதாக புதிய அறிக்கையொன்றின் ஊடாக ஐ.நா சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய 3.4 மில்லியன் பேருக்கு தற்போது மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக சபை குறிப்பிட்டுள்ளது.

கர்ப்பிணித் தாய்மார், சிறு குழந்தைகள் உள்ளிட்ட 2.4 மில்லியன் பேருக்கு உணவினை வழங்குவதற்கும் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மீனவ சமூகத்தினருக்கு உதவிகளை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

இன்றைய (ஜூலை 8) பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் தலைமையில் வழமைபோல் ஆரம்பமாகியுள்ளது. நாளைய முக்கிய செயல்முறைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன: 🔹...

2027 முதல் சொத்து வரி அறிமுகம் – சர்வதேச நாணய நிதியம் தகவல்

2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இந்த...