follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுஓமானுக்கு செல்லும் பெண்கள் விற்பனை : விசாரணை ஆரம்பம்

ஓமானுக்கு செல்லும் பெண்கள் விற்பனை : விசாரணை ஆரம்பம்

Published on

வீட்டுப் பணிப்பெண்களாக பணிபுரிய ஓமானுக்குச் செல்லும் இலங்கைப் பெண்களை விற்பனை செய்வதாக கூறப்படும் ஆட் கடத்தல் குழு குறித்து இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தலைமையிலான துப்பறியும் குழு விசாரணை நடத்த ஓமனுக்குச் சென்றதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் இளம் பெண்களுக்கு வீட்டு உதவியாளர்களாக வேலை பெற்றுத்தருவதாக உறுதியளித்து ஓமனுக்கு அனுப்புகின்றன.

மேலும் அவர்களில் பெரும்பாலோர் மத்திய கிழக்கு நாட்டிற்குள் நுழைய சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி வருகின்றனர்.

குறித்த பெண்கள் ஓமனை அடைந்ததும், அவர்களின் வயது மற்றும் தோற்றம் மற்றும் ஏலம் ஆகியவற்றிற்கு ஏற்ப வரிசைப்படுத்தப்பட்டு, பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காகவும் விற்கப்படுவதாகவும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்தநிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஓமானில் உள்ள தூதரகத்தால் இயக்கப்படும் பாதுகாப்பு இல்லத்தில் உள்ள 90க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலர் இந்த கடத்தல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. உலக...

அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்

எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி...