follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுவெளிநாடு சென்றுள்ள இராணுவ உறுப்பினர்களுக்கான அறிவித்தல்

வெளிநாடு சென்றுள்ள இராணுவ உறுப்பினர்களுக்கான அறிவித்தல்

Published on

விடுமுறை அல்லாது சேவைக்கு சமுகமளிக்காமல் தற்போது வெளிநாடுகளில் இருக்கும் இராணுவ உறுப்பினர்களுக்கு, சட்டபூர்வமாக சேவையிலிருந்து விலகுவதற்கான பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் ஒக்டோபர் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரான காலப்பகுதியில் விடுமுறை அல்லாது சேவைக்கு சமுகமளிக்காத இராணுவ வீரர்களுக்காக மாத்திரம் இந்த பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு பயணிக்காமை அல்லது வௌிநாடு செல்லும் போது கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்கள் மோசடியாக தயாரிக்கப்படவில்லை என்பன குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

டயானாவுக்கு எதிரான குற்றச் செயல்கள் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல்...

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...