follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுவெளிநாடு சென்றுள்ள இராணுவ உறுப்பினர்களுக்கான அறிவித்தல்

வெளிநாடு சென்றுள்ள இராணுவ உறுப்பினர்களுக்கான அறிவித்தல்

Published on

விடுமுறை அல்லாது சேவைக்கு சமுகமளிக்காமல் தற்போது வெளிநாடுகளில் இருக்கும் இராணுவ உறுப்பினர்களுக்கு, சட்டபூர்வமாக சேவையிலிருந்து விலகுவதற்கான பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் ஒக்டோபர் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரான காலப்பகுதியில் விடுமுறை அல்லாது சேவைக்கு சமுகமளிக்காத இராணுவ வீரர்களுக்காக மாத்திரம் இந்த பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு பயணிக்காமை அல்லது வௌிநாடு செல்லும் போது கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்கள் மோசடியாக தயாரிக்கப்படவில்லை என்பன குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...