வசந்த முதலிகேவை உடனடியாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

340

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை உடனடியாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (10) உத்தரவிட்டுள்ளது.

மேலும், முதலிகேவை கராபிட்டிய வைத்தியசாலையின் நீதி மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்துமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வசந்த முதலிகே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (10) அவர் தடுத்துவைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here