கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்னாள் உண்ணாவிரதப் போராட்டமொன்று தற்போது இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்வது, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சமூக ஆர்வலர்களினால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.