follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஎத்தனோல் இறக்குமதி வரி அதிகரிப்பு

எத்தனோல் இறக்குமதி வரி அதிகரிப்பு

Published on

எத்தனோல் இறக்குமதி வரியை மீண்டும் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று காலத்தின் போது, ​​கிருமிநாசினி திரவ உற்பத்தியில் எத்தனோல் பயன்படுத்தப்பட்டதால் இறக்குமதி வரி குறைக்கப்பட்டது.

இவ்வாறு வரியை மீண்டும் அதிகரிப்பதன் மூலம் 1.6 பில்லியன் ரூபா வருமானத்தை அரசாங்கம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் தொற்று காலத்தில் எத்தனோல் வரி 2020 ஏப்ரல் 30 மற்றும் 2020 ஜூன் 09 ஆகிய இரு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு லீற்றருக்கு 25 ரூபாவாக இருந்த வற் வரியை 50 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஜனவரி மாதம் 25 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும், வாடிக்கையாளருக்கு பலன் கிடைக்காத காரணத்தினால், வரியை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...