follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉலகம்ராமர் பாலம் தொடர்பான மனுவிற்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு

ராமர் பாலம் தொடர்பான மனுவிற்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு

Published on

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரும் பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் மனுவிற்கு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த மனுவிற்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசிற்கும் 2 வாரங்களுக்குள் விளக்க மனு தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரும் சுப்ரமணியன் சுவாமியின் மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி D.Y.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் குழாம் விசாரித்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க முடியுமா, இல்லையா என்ற கேள்விக்கு எளிமையான பதில் தேவை எனவும்  8 வருடங்களாக இதற்கு பதிலளிக்கப்படவில்லை  எனவும் வாதிட்டார்.

மத்திய அரசின்  சார்பில் ஆஜராக வேண்டிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வௌிநாடு சென்றிருப்பதாலும் தாக்கல் செய்யப்படவுள்ள பதில் மனு தொடர்பில் அமைச்சின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளதாலும் விசாரணையை தள்ளிவைக்க மத்திய அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம் குறித்த மனுவிற்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசிற்கும் 2 வாரங்களுக்குள் விளக்க மனு தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கும் உத்தரவிட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மெக்சிகோ வாகன விபத்தில் 21 பேர் உயிரிழப்பு

மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குவாகனோபாலன் மற்றும் ஓக்ஸாகா...

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும்...

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...