follow the truth

follow the truth

August, 29, 2025
Homeஉள்நாடுடுபாய் சந்தைக்கு ஏற்றுமதியாகும் வாழைப்பழம்

டுபாய் சந்தைக்கு ஏற்றுமதியாகும் வாழைப்பழம்

Published on

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு வருவாயை ஈட்டித்தரும் ஏற்றுமதியாக வாழைப்பழம் மாறியுள்ளது.

இலங்கையில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் புளி வாழை (கதலி) இன்று சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய பழமாக மாறியுள்ளது

இந்நிலையில் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழங்களின் முதலாவது தொகுதி சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய புளி வாழைப்பழங்களின் முதல் தொகுதி எதிர்வரும் 26ஆம் திகதி டுபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

12,500 கிலோ புளி வாழைப்பழத்தை டுபாய் சந்தைக்கு விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ராஜாங்கனை பகுதியில் பயிரிடப்பட்ட வாழைத்தோட்டத்தில் பெறப்பட்ட அறுவடை வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் வகையில் அந்நியச் செலாவணியை ஈட்டும் நோக்கில் ராஜாங்கனை புளி வாழைத் திட்டம் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கவனிப்பாரற்ற கிடந்த வாழைப்பழங்கள் இன்று நாட்டுக்கு டொலரை ஈட்டிக் கொடுக்கும் பழமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...