follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுவெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக மோசடி - 570 முறைப்பாடுகள் பதிவு

வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக மோசடி – 570 முறைப்பாடுகள் பதிவு

Published on

வெளிநாடுகளில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபற்ற தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து இந்த வருடம் ஜனவரி முதல் ஒக்டோபர் வரை 570 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கிறது.

அவற்றில் 182 முறைப்பாடுகள் நீதிமன்ற நடவடிக்கைளுக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மோசடியான முறையில் அறவிடப்பட்ட 2 கோடியே 83 இலட்சத்து 83 ஆயிரம் ரூபா பணத் தொகையை முறைப்பாட்டாளர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி சம்பவங்கள் தொடர்பில் பணியகம் செய்த முறைப்பாடுகளின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட 17 சுற்றிவளைப்புகளில் 43 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பணியகம் மேலும் குறிப்பிடுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...