follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுபடகு கவிழ்ந்து விபத்து – மூவர் மாயம்

படகு கவிழ்ந்து விபத்து – மூவர் மாயம்

Published on

சூரியவெவ-மஹாவெலிகடஆர வாவியில் சவாரியின் போது படகு கவிழ்ந்ததில் மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்.

விபத்தின் போது படகில் 8 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படகில் பயணம் செய்த குழந்தை உட்பட 5 பேர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போன மூன்று சிறுமிகளை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீரில் மூழ்கி மீட்கப்பட்ட 8 மாத குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

18, 17 மற்றும் 10 வயதுடைய பெண்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் குருநாகல் பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் உறவினர் நிகழ்வு ஒன்றிற்காக இந்த பகுதிக்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் சிறிய படகில் 08 பேர் பயணித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அப்போது வாவியின் நடுவே படகு கவிழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...