follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுபெண்கள் இருவர் கைது!

பெண்கள் இருவர் கைது!

Published on

போராட்டத்தின் தாய்மார்கள் என்று தம்மை அழைத்துக்கொண்டு களுத்துறையில் இருந்து காலி முகத்திடலுக்கு நடை பேரணியாக சென்ற இரு பெண்களை பாணந்துறை கொரகாபொல பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பெருமளவான பொலிஸார் அங்கு வந்து இந்த இரு பெண்களையும் பொலிஸ் காவலில் எடுத்துச் சென்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

அதற்கு இடையூறாக இருந்ததாக மற்றொரு பெண் ஒருவரும் மற்றும் ஆண் ஒருவரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று (12) காலை களுத்துறையில் இருந்து இந்த நடைபயணத்தை ஆரம்பிக்கும் போது பொலிஸாரின் இடையூறுகள் ஏற்பட்டதோடு, இடையூறுகளுக்கு மத்தியில் பயணத்தை ஆரம்பித்திருந்தனர்.

பின்னர், வாத்துவை பிரதேசத்தில் மீண்டும் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பின்னர், பாணந்துறை பகுதியில் வைத்து அவர்களை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்ற நிலையில் இருவரும் பஸ்ஸில் ஏறி பாணந்துறை கோரக்காபொல பகுதியை அடைந்துள்ளனர்.

அப்பகுதியில் வைத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு பெண்களும் பொரளை மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...