follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுதிலினி பிரியமாலியின் தொலைப்பேசி உரையாடல் – ஞானசார தேரரிடம் விசாரணை

திலினி பிரியமாலியின் தொலைப்பேசி உரையாடல் – ஞானசார தேரரிடம் விசாரணை

Published on

திலினி பிரியமாலி செய்ததாகக் கூறப்படும் பெரும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, ஞானசார தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவரிடம் சுமார் மூன்று மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த பாரிய மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் திரைப்படக் கலைஞர்கள் போன்ற பல முக்கியப் பிரமுகர்களிடம் வாக்குமூலம பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின்படி சந்தேகநபர் 2,510 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரியமாலியுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

திலினி பிரியமாலிக்கு எதிராக இதுவரை 14 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கடந்த வாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.

திலினி பிரியமாலி, இசுரு பண்டார, ஜானகி சிறிவர்தன மற்றும் பொரளை சிறிரிசுமண தேரர் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...