follow the truth

follow the truth

August, 10, 2025
Homeஉள்நாடுகாணாமல் போன ஏனைய சிறுமிகளின் சடலங்களும் கண்டுபிடிப்பு

காணாமல் போன ஏனைய சிறுமிகளின் சடலங்களும் கண்டுபிடிப்பு

Published on

18 மற்றும் 16 வயதுடைய இரு சிறுமிகளின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்த இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தா சகோதரிகள் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த படகில் 8 பேர் பயணித்திருந்த நிலையில் அதில் 5 பேர் காப்பாற்றப்பட்டிருந்தனர்.

ஏனைய மூன்று பேரும் காணாமல் போயிருந்த நிலையில் 10 வயதுடைய சிறுமியின் சடலம் நேற்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

ஏனைய இரு சிறுமிகளையும் தேடும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவர்களது சடங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்துக்கு உள்ளானவர்கள் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் உறவினர் வீடு ஒன்றுக்கு வந்த நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் சிறிய படகில் 08 பேர் பயணித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வாவியின் நடுப்பகுதியில் படகு கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...