follow the truth

follow the truth

August, 10, 2025
Homeஉள்நாடுமாணவர் வருகை 80 சதவீதமாக வீழ்ச்சி!

மாணவர் வருகை 80 சதவீதமாக வீழ்ச்சி!

Published on

மாணவர்களின் பாடசாலை வருகை 95 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல பகுதிகளில் உள்ள சுமார் 400 ஆசிரியர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட சிறுவர்களிடமிருந்தும் கல்வி அமைச்சிடம் இருந்தும் பெறப்பட்ட தரவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில மாகாணங்களில் வாரநாட்களில் திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் வெள்ளிக்கிழமை மாணவர்களின் வருகை வெகுவாக வீழ்ச்சியை பதிவு செய்கிறது.

குறிப்பாக வட மாகாணத்தில் திங்கட்கிழமை 81 சதவீதமாக பதிவாகும் மாணவர் வருகை, வெள்ளிக்கிழமை 76 சதவீதமாக குறைவடைகிறது.

தென் மாகாணத்தில் திங்கட்கிழமை 86 சதவீதமாக பதிவாகும் மாணவர் வருகை, வெள்ளிக்கிழமை 79 சதவீதமாக வீழ்ச்சியடைகிறது.

இவ்வாறு 10 முதல் 15 சதவீதமாக மாணவர்களின் வருகை குறைவடைதல் அல்லது கற்றல் செயற்பாடுகளை கைவிடுதல் போன்ற நடவடிக்கைகள் மிகவும் மோசமான நிலைமையாகும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...