follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபொலிஸ் மா அதிபருக்கு HRC அழைப்பு

பொலிஸ் மா அதிபருக்கு HRC அழைப்பு

Published on

இந்த நாட்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் தன்னிச்சையான செயற்பாடுகளின் ஊடாக மக்களின் மனித உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுகின்றமையை கண்காணிக்கக்கூடியதாக உள்ளதென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையானது ஜனநாயக சமூகத்தின் உயிர்ப்பு மற்றும் சட்டவாட்சிக்கு பாரிய அச்சுறுத்தல் என்பதே மனித உரிமை ஆணைக்குழுவின் நிலைப்பாடு என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சட்டத்தை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக எதிர்வரும் 21ஆம் திகதி காலை 10 மணிக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...