follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் தாம் இணையவில்லை - சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் தாம் இணையவில்லை – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published on

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் தாம் இணையவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவில் சுயேச்சையாக செயற்பட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி நேற்று (14) ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்தார்.

தனக்கு மேலதிகமாக அனுர பிரியதர்சன யாப்பா, டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, விசேட வைத்திய நிபுணர் கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, பியங்கர ஜயரத்ன மற்றும் ஜயரத்ன ஹேரத் ஆகியோர் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, தான் வெளிநாட்டில் இருப்பதால் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

தான் எந்தவொரு கூட்டமைப்பிலும் இணைந்துகொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களான டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன மற்றும் ஜயரத்ன ஹேரத் ஆகியோர் தாங்களும் கூட்டணியில் இணையவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

“ஈரான் உண்மையான தலைவரை இழந்துவிட்டது” – சஜித்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் கடிதத்தில் ஈரான்...

வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்த தீர்மானம்

எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் அதிகரிக்கப்படும்

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபா...