போலி பிறப்புச்சான்றிதழ்! போலிக் கடவுச்சீட்டு ! போலி தேசிய அடையாள அட்டை : டயானாவின் முகத்திரை கிழிந்தது!

1973

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பிரித்தானிய பிரஜை எனவும் அவரது வீசா கடந்த 2014 ஆம் ஆண்டுடன் காலாவதியாகியுள்ளதாகவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் களஞ்சிய தரவுகளின் அடிப்படையில், நயனா சமன்மலி அல்லது டயானா நடாஷா என அழைக்கப்படும் நடாஷா கெகனதுர பிரித்தானிய பிரஜை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் போலி பிறப்புச்சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையை பெற்று போலிக் கடவுச்சீட்டை அவர் பெற்றுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்- டயனா கமகே இரட்டை குடியுரிமை கொண்டவர் அல்ல. எனினும் பிரித்தானிய குடியுரிமையுடன் இலங்கைக்கான போலிக்கடவுச்சீட்டை வைத்திருப்பவர் என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மூலம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் மேலதிக விபரங்களை நீதிமன்றுக்கு வழங்கி வழக்கு விசாரணைகளை முடிவுறுத்த ஒத்துழைக்குமாறு நீதிமன்றம் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here