follow the truth

follow the truth

April, 24, 2025
Homeஉள்நாடுநுகர்வோர் விவகார சட்டமூலம் நிறைவேறியது

நுகர்வோர் விவகார சட்டமூலம் நிறைவேறியது

Published on

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் திருத்தமின்றி இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த திருத்தச் சட்டமூலம் இன்று (22) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று (21) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வர்த்தக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இதற்கான வழங்கப்பட்டது.

இந்தத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அதற்கமைய, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்காக இன்று (22) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினால் சில பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை குறிப்பிட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது

அதன்பின்னர், அந்தக் கட்டுப்பாட்டு விலையில் பொருட்களை விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை இந்த திருத்தச் சட்டமூலத்தின் அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம்...

ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிப்பு

நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனையை முன்னிட்டு 2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க...

சமூக ஊடக காணொளிகளுக்கு இராணுவ சீருடைகள் தடை – இராணுவ தலைமையகம்

சமூக ஊடகங்களில் பல்வேறு பிரபலமான பயன்பாடுகள் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள், பாடல்கள் மற்றும் குறுகிய காணொளிகளில் அனுமதியின்றி இராணுவ...