இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்றுவதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று சபையில்
அறிவித்தார்.
இந்த பாராளுமன்ற விசேட குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர்
சட்டத்தரணி மதுர விதானகே பணியாற்றவுள்ளார். அத்துடன் இக்குழுவின் உறுப்பினர்களாக நஸீர் அஹமட், அரவிந்த் குமார், சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, தருமலிங்கம் சித்தார்தன், மொஹமட் முஸம்மில், சமிந்த விஜேசிறி,
வருண லியனகே,சஞ்ஜீவ எதிரிமான்ன, நாலக பண்டார கோட்டேகொட,கோகிலா குணவர்தன, லலித் வர்ண குமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.