follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமன்னார் மறைமாவட்ட ஆயர் ஜனாதிபதியைச் சந்தித்தார்

மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜனாதிபதியைச் சந்தித்தார்

Published on

மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடெல்ஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை உள்ளிட்டகுழுவினர் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்தனர்.

மன்னார் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் விளக்கமளிக்கப்பட்டதுடன், அது தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

மடு யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது தொடர்பிலும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் அருட்தந்தை ஜொய்ஸ் பெப்பி சொசாய் (Joyce Peppi Sosai Santia) அருட்தந்தை ஆண்டனி சொசாய் (Antony Sosai) உள்ளிட்ட அருட்தந்தையர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...