follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுவதிவிடமல்லாத சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

வதிவிடமல்லாத சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

Published on

2022 நவம்பர் 13 முதல் 18 வரையான இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, சிங்கப்பூரின் வதிவிடமல்லாத உயர்ஸ்தானிகர்  சந்திர தாஸ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை அண்மையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி மற்றும் உயர்ஸ்தானிகர் தாஸ் இருவரும் கலந்துரையாடினர். சிங்கப்பூரின் வணிகப் பிரதிநிதிகள் குழுவொன்றும் உயர்ஸ்தானிகருடன் இதன்போது இணைந்திருந்தனர். சிங்கப்பூரில் இருந்து சாத்தியமான முதலீடு மற்றும் வணிகத்திற்கான வாய்ப்புக்கள் மற்றும் பகுதிகள் குறித்து அமைச்சர் இதன்போது விளக்கினார்.

இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவை சந்தித்த உயர்ஸ்தானிகர் தாஸ், இரு நாடுகளுக்கும் இடையிலான நிதி, முதலீடு மற்றும் சுற்றுலா தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி, வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர், சுகாதார அமைச்சர், முதலீட்டு சபையின் தலைவர் மற்றும் இலங்கை வர்த்தக சபையினரையும் உயர்ஸ்தானிகர் தாஸ் இலங்கைக்கான தனது விஜயத்தின் போது சந்திக்கவுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

மீனவ மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து...

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க SJB உடன் இணைவு

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் குறித்து கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய...