follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுகல்கிஸ்ஸ பகுதி சுற்றிவளைப்பில் பலர் கைது!

கல்கிஸ்ஸ பகுதி சுற்றிவளைப்பில் பலர் கைது!

Published on

கல்கிஸ்ஸ, படோவிடவத்த பகுதியில் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் சந்தேக நபர்கள் குழுவொன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பரிசோதகர் தேசபந்து தொன்னகோனின் பணிப்புரைக்கமைய மேல்மாகாண குற்றப்பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாந்த ஜயக்கொடியின் மேற்பார்வையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் அபேசேகர தலைமையில் இந்த விசேட சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

படோவிடவத்த பகுதியில் மறைந்திருந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 9 பேர் மற்றும் 14 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LATEST NEWS

MORE ARTICLES

மீனவ மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து...

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க SJB உடன் இணைவு

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் குறித்து கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய...