follow the truth

follow the truth

August, 1, 2025
Homeஉள்நாடுகல்கிஸ்ஸ பகுதி சுற்றிவளைப்பில் பலர் கைது!

கல்கிஸ்ஸ பகுதி சுற்றிவளைப்பில் பலர் கைது!

Published on

கல்கிஸ்ஸ, படோவிடவத்த பகுதியில் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் சந்தேக நபர்கள் குழுவொன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பரிசோதகர் தேசபந்து தொன்னகோனின் பணிப்புரைக்கமைய மேல்மாகாண குற்றப்பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாந்த ஜயக்கொடியின் மேற்பார்வையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் அபேசேகர தலைமையில் இந்த விசேட சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

படோவிடவத்த பகுதியில் மறைந்திருந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 9 பேர் மற்றும் 14 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...