கல்கிஸ்ஸ பகுதி சுற்றிவளைப்பில் பலர் கைது!

839
கல்கிஸ்ஸ, படோவிடவத்த பகுதியில் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் சந்தேக நபர்கள் குழுவொன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பரிசோதகர் தேசபந்து தொன்னகோனின் பணிப்புரைக்கமைய மேல்மாகாண குற்றப்பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாந்த ஜயக்கொடியின் மேற்பார்வையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் அபேசேகர தலைமையில் இந்த விசேட சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

படோவிடவத்த பகுதியில் மறைந்திருந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 9 பேர் மற்றும் 14 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here