follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுமடு.பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் வீடு கையளிப்பு!

மடு.பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் வீடு கையளிப்பு!

Published on

மடு .பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு அமைச்சினால் வழங்கப்பட்ட 10 இலட்சம் பெறுமதியான வீடு நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.

இதேவேளை பயனாளியினால் முழுமையாக கட்டி முடிக்க முடியாத காரணத்தினால் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இராணுவத்தினர் முழுமையாக கட்டி முடித்தனர்.

மேலும் குறித்த வீட்டிற்கு தேவையான சில தளபாட பொருட்களையும் இராணுவத்தினர் வழங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் வன்னி இராணுவ கட்டளைத் தளபதி, மடு பிரதேச செயலாளர் கே.வி. நிஜாகரன் உதவி பிரதேச செயலாளர், ஆகியோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...