follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுகொழும்பு துறைமுகத்தில் பயணிகள் சொகுசு கப்பல்!

கொழும்பு துறைமுகத்தில் பயணிகள் சொகுசு கப்பல்!

Published on

அமெரிக்காவின் முதலாவது சொகுசு பயணிகள் பயணக் கப்பலான ‘வைக்கிங் மார்ஸ்’ (Viking Mars ) இன்றையதினம் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இன்றையதினம் 900 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்துள்ள குறித்த கப்பலானது நாளை வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கின்றது.

கப்பலில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள், இலங்கையின் முக்கிய இடங்களை கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கண்டி, பின்னவெல, காலி போன்ற நகரப் பயணங்கள், கொழும்பின் சில முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லபப்படவுள்ளனர்.

முத்துராஜவெல மற்றும் ஆற்றில் படகுச் சவாரி, விவசாயக் கிராமங்களை பார்வையிடுதல், முச்சக்கரவண்டி சுற்றுப்பயணங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், சமையல் அனுபவங்கள், கலை மற்றும் கட்டிடக்கலைச் சுற்றுலாக்கள் மற்றும் இலங்கையின் தேயிலையின் சிறப்பு போன்றவற்றை அனுபவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...