follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுமக்களின் நன்மதிப்பை இழக்கும் இலங்கை பொலிஸ் - ஒழுக்கம் பேண வலியுறுத்தல்!

மக்களின் நன்மதிப்பை இழக்கும் இலங்கை பொலிஸ் – ஒழுக்கம் பேண வலியுறுத்தல்!

Published on

சட்ட ஒழுங்கையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்காக, இலங்கை பொலிஸார் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு பொலிஸ்மா அதிபர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் கடந்த வார இறுதியில் பாணந்துறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கட்டுப்படுத்தியமைக்கான காரணங்களை நியாயப்படுத்துமாறும் பொலிஸ்மா அதிபரிடம் அந்த ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

களுத்துறை தலைமை பொலிஸ் பரிசோதகர் இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை தள்ளிவிட்ட சம்பவம் குறித்தும் அமைதிப் பேரணியை சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தி பங்கேற்றவர்களை கைது செய்யப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, களுத்துறையில் இருந்து புறப்பட்ட அமைதிப் பேரணி பாணந்துறையில் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டதை, இன்று தமது ஆணைக்குழுவில் பாணந்துறை பொலிஸ் தலைமைப் பரிசோதகர் ஒப்புக்கொண்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் குறித்த பேரணியை கட்டுப்படுத்தியதற்கான காரணம் என்ன? யாருடைய கட்டளை அல்லது உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது? தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ன? என்பவை குறித்து ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் அளிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பாணந்துறை பொலிஸ் பிரிவிற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேவையான கட்டளைகளை வழங்கி பேரணியில் பங்குபற்றியவர்களை பாதுகாக்க தவறியுள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே, அண்மைக்காலங்களில் பொலிஸாரின் பொருத்தமற்ற நடத்தைகள் மக்கள் மத்தியில் பொலிஸாரின் மேலுள்ள நம்பிக்கையை அழித்துள்ளது அத்துடன் சர்வதேச ரீதியில் நாட்டின் நன்மதிப்பையும் விரைவாக அழித்து வருவதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...