டுபாய் மற்றும் ஓமானுக்கு ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (19) பிற்பகல் கொழும்பில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை மீறி பெண்களை ஓமான் மற்றும் அபுதாபிக்கு வேலைக்காக அனுப்பிய பிரதான சந்தேகநபர்களில் ஒருவரின் பிரதிநிதி கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேக நபர் அவிசாவளை புவக்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக பெண்களை ஏமாற்றி, வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது