follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஇசுருவின் தொலைபேசி பதிவுகள் குறித்து விசாரணை!

இசுருவின் தொலைபேசி பதிவுகள் குறித்து விசாரணை!

Published on

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் காதலன் என நம்பப்படும் இசுரு பண்டாரவின் தொலைபேசி பதிவு தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இசுரு பண்டாரவிற்கும் மற்றொருவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த உரையாடல் பதிவு தொடர்பாக இசுரு பண்டாரவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் உரையாடல் பதிவு சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற உரையாடல் அல்ல என விசாரணைகளின்போது இசுறு பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த தொலைபேசியில் இடம்பெற்ற உரையாடல் பதிவு தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...