follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஇசுருவின் தொலைபேசி பதிவுகள் குறித்து விசாரணை!

இசுருவின் தொலைபேசி பதிவுகள் குறித்து விசாரணை!

Published on

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் காதலன் என நம்பப்படும் இசுரு பண்டாரவின் தொலைபேசி பதிவு தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இசுரு பண்டாரவிற்கும் மற்றொருவருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த உரையாடல் பதிவு தொடர்பாக இசுரு பண்டாரவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் உரையாடல் பதிவு சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற உரையாடல் அல்ல என விசாரணைகளின்போது இசுறு பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த தொலைபேசியில் இடம்பெற்ற உரையாடல் பதிவு தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...