follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுநகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக சத்யானந்தா! 

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக சத்யானந்தா! 

Published on

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.எஸ்.சத்யானந்தா இன்று (21) அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார்.
நிர்வாகப் பணிகளில் நீண்ட அனுபவம் கொண்ட திரு. டபிள்யூ.ர்ஸ். சத்தியானந்தா நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளராக வருவதற்கு முன்னர் கம்பஹா மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றினார்.
காலி/ பத்தேகம கிறிஸ்துதேவா ஆண்கள் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர் அதே கல்லூரியில் சிறிது காலம் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ இளங்கலை பட்டம் பெற்ற திரு.சத்யானந்தா அவுஸ்திரேலியாவின் லரோப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்
1998 ஆம் ஆண்டு நிர்வாக சேவையில் இணைந்து கொண்ட திரு.சத்யானந்தா தவலம, பத்தேகம, ஹிக்கடுவ மற்றும் காலி கடவத் சதர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார்.
மேலும், அவர் முன்னர் தொழிற்பயிற்சி அமைச்சின் உதவிச் செயலாளராகவும், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளராகவும், அரச  நிதித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான அருந்திக பெர்னாண்டோ, தேனுக விதானகமகே, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...