ஆட்கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூன்றாவது அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரி இலங்கை வந்தவுடன் கைது செய்யப்படுவார் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.