ஓமான் விவகாரம் – மேலும் இரு சந்தேகநபர்கள் கைது!

312

ஓமன் மற்றும் டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆட் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் பதுளை பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன் அவர் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றைய சந்தேக நபர் குருநாகல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஓமன் மற்றும் டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆட் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே 3 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here