சுமார் 600 மில்லியன் டொலர்களாக இருந்த மாதாந்த எரிபொருள் விலை தற்போது 200-250 மில்லியன் டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்ததை விட சிறந்து விளங்கியதாகவும் அமைச்சர் கூறினார்.
இலங்கையின் எரிசக்தி துறையை மறுசீரமைக்க வேண்டும் என்றும் இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் மேலும் கூறினார்.