follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுவெலே சுதாவுக்கு எதிரான வழக்கின் முன்விளக்க மாநாட்டுக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது

வெலே சுதாவுக்கு எதிரான வழக்கின் முன்விளக்க மாநாட்டுக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது

Published on

சட்ட விரோதமாக ரீ 56 ரக துப்பாக்கி மற்றும் ரிவோல்வர் ஒன்றினை உடன் வைத்திருந்தமை தொடர்பில், பிரபல போதைப் பொருள்  வர்த்தகர்  என அறியப்படும்  கம்பொல விதானகே சமந்த குமார எனும் வெலே சுதாவுக்கு எதிராக சட்ட மா அதிபர் தொடர்ந்துள்ள வழக்கின் முன் விளக்க மாநாட்டுக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதி குறித்த வழக்கின் முன் விளக்க மாநாடு இடம்பெறும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று ( 23) அறிவித்தார்.

அதன்படி குறித்த தினம் விசாரணை அதிகாரியான பொரலஸ்கமுவ பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் மன்றில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் பொரளை பகுதியில் குறித்த ஆயுதங்களை உடன் வைத்திருந்தமை தொடர்பில், மற்றொரு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்

இந்நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர்பிக்கச் செய்வதன் மூலம் கிராமிய அபிவிருத்திக்கு செயற்திறன்மிக்க வகையில் பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார...

சப்ரகமுவ பல்கலைக்கழக 10 மாணவர்கள் மீண்டும் விளக்கமறியலில்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 மாணவர்கள், எதிர்வரும் 29ஆம்...

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு எதிரான வழக்கை...