follow the truth

follow the truth

May, 10, 2025
Homeஉள்நாடுதிருத்தப்பட்ட ரயில் நேர அட்டவணை குறித்த அறிவிப்பு

திருத்தப்பட்ட ரயில் நேர அட்டவணை குறித்த அறிவிப்பு

Published on

திருத்தப்பட்ட ரயில் நேர அட்டவணையை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ. ஏ.டி. எஸ். குணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அட்டவணை விரைவில் வெளியிடப்பட்டு, அடுத்த வாரத்தில் நடைமுறைக்கு வரும் திகதி அறிவிக்க எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் தடம் புரண்டது தொடர்பான முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு, ரயில் பாதையின் பாழடைந்த பகுதிகளில் குறைந்த வேகத்தில் ரயில்களை இயக்க வேகத்தடை விதிக்கப்பட்டது.

வேகத்தடை விதிப்பதால் ஏற்படும் ரயில் காலதாமதத்தை கருத்தில் கொண்டு ரயில் அட்டவணை திருத்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ரயில் தாமதம் காரணமாக, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, அங்கு வரும் அதிகாரிகளுக்கு திட்டமிடப்பட்ட கடமை நேரத்திலிருந்து வருவதற்கு அரை மணித்தியாலமும், புறப்படுவதற்கு ஒரு மணிநேரமும் அவகாசம் வழங்க தீர்மானித்துள்ளது.

கடமைக்கு இடையூறு ஏற்படாத வகையில் உரிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த அவகாசம் பெறும் அதிகாரிகள் மதிய உணவு நேரத்தின் போது இயன்றவரை சம்பந்தப்பட்ட கடமைகளை ஈடுகட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...