follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉள்நாடுசிறந்த ஆசிரியர்களை உருவாக்க விரைவில் தேசிய பல்கலைக்கழகம்

சிறந்த ஆசிரியர்களை உருவாக்க விரைவில் தேசிய பல்கலைக்கழகம்

Published on

எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலுக்கு ஆட்களை இணைத்துக் கொள்வதில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விப் பல்கலைக்கழகம் நிறுவப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பரீட்சை முறையின் ஊடாகவே கடந்த முறை ஆசிரியர்களை இணைத்துக் கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, 19 பீடங்களை நிறைவு செய்யும் வகையில் உருவாக்கப்படும் தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தின் ஊடாக ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நான்கு ஆண்டு பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டத்திற்குப் பின்னர் அவர்கள் பாடசாலைகளுக்கு அனுப்பப்படுவார்கள், அதன் மூலம் தரம் மற்றும் தரநிலைகளுடன் ஒரு ஆசிரியரை உருவாக்க முடியும்.

தற்போது அரச துறையில் கடமையாற்றும் பயிலுனர் பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் பொதுப் பரீட்சை டிசம்பர் மாத நடுப்பகுதியில் நடத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

26,000 ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர், பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்காணல்கள் மூலம் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து

இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 24...

துறைமுகங்கள், விமான நிலையங்களில் இலத்திரணியல் நுழைவாயில் அமைப்புக்கள் விரைவாக மேற்கொள்ளப்படும்

ஜப்பான் நாட்டின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இலத்தரணியல் நுழைவாயில் அமைப்பை நிறுவும் திட்டத்தை விரைவாக மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் போக்குவரத்து,...

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

ரயில் நிலைய அதிபர்கள் இன்று (16) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.