follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுராஜகிரிய சிறுநீரக கடத்தல் : அதிகரிக்கும் முறைப்பாடுகள்

ராஜகிரிய சிறுநீரக கடத்தல் : அதிகரிக்கும் முறைப்பாடுகள்

Published on

ராஜகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இடம்பெறும் சிறுநீரக கடத்தல் தொடர்பாக நேற்றைய தினம் (24) 5 பேர் பொரளை பொலிசில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

பெண் ஒருவர் உட்பட நால்வர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

அவர்கள் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ் பகுதியில் வசிப்பவர்கள். அவர்கள் இருபத்தி ஆறு முதல் நாற்பத்திரண்டு வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் மருத்துவ அறிக்கைகளைப் பெறுவதற்காக இந்தக் குழுவினர் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்த பிரதான பொலிஸ் பரிசோதகரை விசாரணை செய்வதற்காக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மூன்று முறை பணி இடைநீக்கம் செய்யப்பட்ட இந்த அதிகாரி, இந்த சிறுநீரக கடத்தலில் தொடர்புடைய மருத்துவமனை உரிமையாளர்களின் வாகனங்களில் சென்று தலா இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து முறைப்பாட்டாளர்களை மிரட்டி கடிதங்களில் கையெழுத்து வாங்கியது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...