follow the truth

follow the truth

May, 2, 2025
Homeஉள்நாடுராஜகிரிய சிறுநீரக கடத்தல் : அதிகரிக்கும் முறைப்பாடுகள்

ராஜகிரிய சிறுநீரக கடத்தல் : அதிகரிக்கும் முறைப்பாடுகள்

Published on

ராஜகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இடம்பெறும் சிறுநீரக கடத்தல் தொடர்பாக நேற்றைய தினம் (24) 5 பேர் பொரளை பொலிசில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

பெண் ஒருவர் உட்பட நால்வர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

அவர்கள் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ் பகுதியில் வசிப்பவர்கள். அவர்கள் இருபத்தி ஆறு முதல் நாற்பத்திரண்டு வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் மருத்துவ அறிக்கைகளைப் பெறுவதற்காக இந்தக் குழுவினர் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்த பிரதான பொலிஸ் பரிசோதகரை விசாரணை செய்வதற்காக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மூன்று முறை பணி இடைநீக்கம் செய்யப்பட்ட இந்த அதிகாரி, இந்த சிறுநீரக கடத்தலில் தொடர்புடைய மருத்துவமனை உரிமையாளர்களின் வாகனங்களில் சென்று தலா இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து முறைப்பாட்டாளர்களை மிரட்டி கடிதங்களில் கையெழுத்து வாங்கியது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதி – சில கட்டுப்பாடுகள் நீக்கம்

வாகன இறக்குமதி மீதான சில கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல்...

சப்ரகமுவ பல்கலை மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய மூவரடங்கிய குழு

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர்...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை...