follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுதொழிற்சங்க தலைமையினை வெளுத்து வாங்கிய அகில

தொழிற்சங்க தலைமையினை வெளுத்து வாங்கிய அகில

Published on

நல்லாட்சி அரசாங்கத்தின் போது கல்வி அமைச்சராக இருந்த தாம் கர்ப்பிணித் தாய்மார்களை உரிய உடையில் பாடசாலைக்கு வர அனுமதிக்கும் முயற்சிக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த தொழிற்சங்கங்கள், தற்போது பெண் ஆசிரியர்கள் அணியும் புடவைகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம் நேற்று (24) தெரிவித்தார்.

கர்ப்பிணி ஆசிரியைகள் சேலை அணிந்து பாடசாலைக்கு செல்லும் போது அதிக அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக வைத்தியர்கள் சிபாரிசு செய்துள்ளதாகவும், புடவை போன்றவற்றை அணியும் போது வயிறு இறுக்கமடைவதால் கர்ப்பப்பை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

ஐந்தாண்டுகளுக்கு முன் சீருடைக்கு வவுச்சர் முறை அறிமுகப்படுத்தப்பட்டபோதும், அருகில் உள்ள பாடசாலையில் சிறந்த பாடசாலை திட்டத்தை அமல்படுத்தியபோதும், மாணவர்களுக்கு டேப் கம்ப்யூட்டர் வழங்க முயற்சித்தபோதும், ஐந்தாண்டுகளுக்கு முன், வேறு வடிவில் தங்கள் முடிவுகளை, முன்மொழிவுகளை முன்வைத்த இந்த சங்கங்கள், அப்போது வேறு விதமாக எதிர்த்ததாகவும் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அகில காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த தொழிற்சங்கங்கள் டேப் கம்ப்யூட்டர் திட்டத்தை எதிர்க்காமல் இருந்திருந்தால், கொரோனா தொற்றுநோய்களின் போது ஏழை பெற்றோரின் குழந்தைகள் அவற்றைப் பயன்படுத்தி நன்றாகப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் என்று அவர் கூறினார்.

பல்வேறு காலகட்டங்களில் இந்த நாட்டின் அரசியல்வாதிகள் போன்று பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டு நாசவேலையில் ஈடுபடாமல், சம்பந்தப்பட்ட சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தொழிற்சங்கங்கள் செயற்பட வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய காலக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கு ஆடையை விட பிரச்சினைகள் அதிகம் எனவும், கர்ப்பிணி தாய்மார்களின் உடைக்கு எதிராக இருந்தவர்கள் தற்போது புடவைக்கு எதிராக உள்ளதாகவும், சமூகம் கவனமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மக்களைப் பயன்படுத்திக் கொண்டு காலத்துக்காக கொள்கை முடிவுகளை எடுக்கும் வர்த்தகங்கள் நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்த அகில காரியவசம், ‘வெளுத்ததெல்லாம் பால் அல்ல’ என்பது போல் கபடத்தை ஒழித்து ஒரே கொள்கையில் செயற்படும் முறைமை இந்நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும். எந்த அரசாக இருந்தாலும் கொள்கை சரியாக இருந்தால் ஆதரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...