follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉள்நாடுநாட்டில் குறைந்த எடையுடைய 22,000 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

நாட்டில் குறைந்த எடையுடைய 22,000 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Published on

குறைந்த எடையுடைய 22,000 குழந்தைகள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டம் தகவல் வௌியிட்டுள்ளது.

5 வயதிற்கு உட்பட்ட 10 இலட்சம் சிறுவர்களின் போசாக்கு நிலைமையை ஆராய்ந்ததன் பின்னர் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக இந்த வேலைத்திட்டத்தின் தலைவராக செயற்படும் ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.

குறைந்த நிறையுடைய குழந்தைகள் வசிக்கும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் 14,000 கிராம சேவகர் பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும்  கலாநிதி சுரேன் பட்டகொட கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து

இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 24...

துறைமுகங்கள், விமான நிலையங்களில் இலத்திரணியல் நுழைவாயில் அமைப்புக்கள் விரைவாக மேற்கொள்ளப்படும்

ஜப்பான் நாட்டின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இலத்தரணியல் நுழைவாயில் அமைப்பை நிறுவும் திட்டத்தை விரைவாக மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் போக்குவரத்து,...

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

ரயில் நிலைய அதிபர்கள் இன்று (16) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.