follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுபாடசாலை ஆசிரியர்களுக்கான ஆடை தொடர்பில் இதுவரை கொள்கை ரீதியான தீர்மானங்கள் இல்லை

பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆடை தொடர்பில் இதுவரை கொள்கை ரீதியான தீர்மானங்கள் இல்லை

Published on

பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆடை தொடர்பில் இதுவரை கொள்கை ரீதியான எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தற்போது கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இதுவரை காலம் காணப்பட்ட முறைக்கு அமையவே, பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சமூகமளிக்க வேண்டும் என அவர் கூறினார்.

விரும்பிய ஆடையில் ஆசிரியர்கள் சிலர் பாடசாலைக்கு சென்றமை தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

விசாரணைகளின் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...