இந்தியர்கள், வெளிநாட்டினர் என 166 பேர் கொல்லப்பட்ட தினம் இன்று

470

மும்பை தாக்குதலின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.

கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் திகதி பாகிஸ்தானில் இருந்து மும்பைக்கு கடல் வழியாக ஊடுருவிய தீவிரவாதிகளால் மும்பையின் பிரபல தாஜ் ஒட்டல் உள்பட மும்பையின் பல்வேறு முக்கிய இடங்களில் தொடர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதில் இந்தியர்கள், வெளிநாட்டினர் என 166 பேர் கொல்லப்பட்ட அதேவேளை 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பயங்கரவாதிகளுக்கும், இந்திய கடற்படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களை உயிருடன் மீட்க இந்திய ராணுவத்தினர் நடத்திய நடத்திய எதிர் தாகுதலில் தீவிரவாதிகளில் 9 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

மேலும் முக்கிய தீவிரவாதி உயிருடன் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு பின்னர் தூக்கிலிடப்பட்டமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here