follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுமுன்னைய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் - ஜே.சி.அலவத்துவல

முன்னைய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் – ஜே.சி.அலவத்துவல

Published on

முன்னைய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல கேட்டுக்கொண்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், அதனை குறைக்க வேண்டும் என்ற கருத்தையும் அவர்கள் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விருப்பு வாக்கு முறையின் கீழ் நடத்த முடியும் என்றும் முன்னைய தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்த தாம் ஆதரவு என்றும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதற்கு கணிசமான கால அவகாசம் தேவைப்படும் என்றும் எல்லை நிர்ணயத்தை முன்னெடுக்காமல் தேர்தலை நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...