2022ஆம் ஆண்டின் சிறந்த 100 புகைப்படங்களில், ஜூலை 15ஆம் திகதி ஆர்ப்பாட்டதாரர்களால் அழிக்கப்பட்ட அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் புகைப்படத்தையும் டைம்ஸ் சஞ்சிகை உள்ளடக்கியுள்ளது.
இந்த 100 புகைப்படங்களை டைம்ஸ் இதழின் 8 போட்டோ எடிட்டர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த ஆண்டு பல்வேறு நிகழ்வுகள் நிறைந்தது என்பதை காட்டவே இந்த 100 புகைப்படங்களை தேர்வு செய்ததன் நோக்கம் என டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.